புது தில்லி, அக்.29: கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான போட்டியான ஃபார்முலா 1 கார் பந்தயம் தில்லியை அடுத்த நொய்டாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்த சீசனுக்கான ஃபார்முலா 1 கார் பந்தயம் 19 சுற்றுகளாக நடைபெறுகிறது. இதன் 17-வது சுற்றான இந்தியன் கிராண்ட்ப்ரீ பந்தயம் தில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல்முறையாக இப்போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் 12 அணிகளைச் சேர்ந்த 24 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.