|
தமிழக முதல்வரின் உத்தரவை மீறி, விழுப்புரம் அடுத்த பேரங்கியூரில் பட்டபகலில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.விழுப்புரம் மாவட்டம் பேரங்கியூர் பெண்ணையாற்றில் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அரசு மணல் குவாரி நிறுத்தப்பட்டது. இருப்பினும் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடந்து வந்தது.முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், "மணல் திருட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் அந்த உத்தரவை மீறி இரவு நேரங் களில் ஆற்று மணலை திருடி பேரங்கியூர் கிராமத்தில் பல்வேறு இடங்களில் கொட்டிவைத்து பகல் நேரத் தில் பொக்லைன் உதவியுடன் லாரியில் ஏற்றிச் செல்கின் றனர்.முதல்வரின் உத்தரவை நிறைவேற்ற மாவட்ட கலெக்டர் சம்பத் நேரிடையாக தலையிட்டு மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
|