|
வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு மின்வாரிய அலுவலகத்தில் ஜெனரேட்டர் பழுதால், கட்டணம் செலுத்த முடியவில்லை. மின்வாரிய அலுவலகத்தில் (நகர்) மின் தடை நேரத்தில் கட்டணம் செலுத்த முடியவில்லை. இங்கு காலை 9 முதல் மதியம் 12 மணி வரை மின் வினியோகம் உள்ளது. மற்ற நேரங்களில் மின் தடை ஏற்படுகிறது. மூன்று மணி நேரத்தில் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், நெரிசல் அதிகமாக உள்ளது. அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஜெனரேட்டர், பழுதடைந்து விட்டது. இதனால் மின் கட்டணத்தை, தனியார் கம்ப்யூட்டர் மையங்களில் செலுத்தச் சொல்கின்றனர். அங்கு சேவை வரி 10 ரூபாய் கொடுக்க வேண்டும். ஜெனரேட்டரை இயக்கி, நுகர்வோரின் அவதியை போக்க வேண்டும்.
|