|
கடலூர்:கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ். எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் ஆன் லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவல கத்தில் பதிவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கடலூர் புனித அன்னாள் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு சி.இ.ஓ., அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில் குமார் கலந்து கொண்டு, ஆன் லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவது குறித்து செயல் விளக்கமளித்தார்.
மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா, விருத்தாசலம் அறிவழகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் நிர்மலா, முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் உட்பட அனைத்து உயர் நிலை, மேல் நிலை,மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.முதலமைச்சர் அறிவித்துள்ள மாணவர்களுக்கு 14 நலத்திட்ட பணிகளையும் தொய்வின்றி செய்து முடிக்கவெண்டுமென தலைமை சிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.மாணவர்களுக்கான புத்தகங்களை வரும் 24ம் தேதி பெற்று சென்று, வரும் 1ம் தேதி முதல் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தங்களை வழங்கி, அன்றே பாடங்களை துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
|