| |
| |
இயக்குனர் ஆனார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்! |
| |
 |
Published on |
|
 |
Tags |
erodelive |
|
|
|
| |
நூறுக்கும் அதிகமான படங்களில் அடியாளாகவும் முக்கிய வில்லனாகவும் நடித்துள்ள பொன்னம்பலம் முதல்முறையாக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, சண்டைப் பயிற்சி போன்றவற்றுக்குப் பொறுப்பேற்று கதாநாயகனாகவும் நடிக்கிறார். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்படும் இந்தப் படத்துக்கு 'இடியுடன் கூடிய மழை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பொன்னம்பலம் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளியாக, வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். சந்திரநாத், நிழல்கள் ரவி, தேவன், மயில்சாமி, காதல் சுகுமார், பாலாஜி, கிளி, பூபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கனல் கண்ணன், தளபதி தினேஷ், ராக்கி ராஜேஷ் உள்ளிட்ட பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் நட்புக்காக சிறப்புத் தோற்றங்களில் நடிக்கிறார்கள்.
மலேசியாவில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்க வரும் நாயகிக்கும், ஓட்டல் அதிபருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களைப் பிரிக்க ஒரு கும்பல் முயற்சிக்கிறது. இந்தப் பின்னணியில் காதல், ஆக்ஷன் கலந்து சொல்வதுதான் கதை. சண்டைக் காட்சிகளில் பல புதுமைகளைப் புகுத்துகிறோம். அனைவரும் குடும்பத்தோடு காணும் வகையில் படத்தை உருவாக்குகிறோம் என்கிறார் பொன்னம்பலம். |
| மேலும் |
|
| வாசகர்களின் கருத்து |
| பதிவு செய்தவர்: |
Ujbs0r vsqhjzfgbjcq, [url=http://ztgfnabtuwhp.com/]ztgfnabtuwhp[/url], [link=http://urexkwxuqppr.com/]urexkwxuqppr[/link], http://czfvmqukeqab.com/ |
|
| பதிவு செய்தது: |
2010-Aug-05 at 09:23:49 |
|
 |
Ujbs0r vsqhjzfgbjcq, [url=http://ztgfnabtuwhp.com/]ztgfnabtuwhp[/url], [link=http://urexkwxuqppr.com/]urexkwxuqppr[/link], http://czfvmqukeqab.com/ |
|
|
| |
|
| |
|
|
|
|
|
|
|