ஈழத் தமிழருக்கு எதிராக இனவெறி சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலைப் போரில் தமிழர்கள் பட்ட துயரத்தையும், தமிழீழ விடுதலைப் போராளிகள் வெளிப்படுத்திய வீரத்தையும் ஒரு சேர சித்தரித்திருக்கிறார் ஓவியர் புகழேந்தி.
கோவையில் தமிழக அரசு நடத்தவுள்ள செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும், ஆய்விற்கும் என்ன செய்யப்பட வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பை ஒரு கொள்கை அறிக்கையாக தமிழ் நேயம் நடத்திய கருத்தரங்கில் வெளியிடப்பட்டது.
“கச்சத் தீவு ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஒப்பந்தம், தகுந்த காரணங்கள் இல்லாமல் அதனை மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது” என்று ஏதோ ஒரு மதத்தின் புனித நூலிற்கு தரப்படும் மரியாதையுடன் பேசினார் மக்களவையில் இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா.