| இதயத் துடிப்பில் சீரற்றத் தன்மை இருப்பவர்களுக்கு டிபிரிலேட்டர் என்னும் எலக்ட்ரானிக் கருவியை உடலில் பொருத்தி இதயத்தின் துடிப்பை சீராக்குவது மருத்துவ சிகிச்சையாகும். ஆனால் இந்த டிபிரிலேட்டர் கருவி ஓரளவிற்குத்தான் இதயத் துடிப்பை சீர்படுத்தும். தற்போது இந்தக் கருவியில் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் பழைய மின் வயர்கள் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக வயர் இல்லாமல் நரம்புகளின் ஊடாக சென்சார் இணைப்பு கொடுக்கப்பட்டு ரத்த அணுக்களின் மின் அதிர்வை உணர்ந்து செயல்படும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதயத் துடிப்பில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்து கட்டுப்படுத்தவும், டிபிரிலேட்டரால் இயங்கும் இதயத்தை எப்போதும் சீராக துடிக்கச் செய்யவும் முடியும். டிபிரிலேட்டர் பொருத்திக் கொண்ட நோயாளியின் உடல் நலத்தைத் தொடர்ந்து சீராக இருக்கவும் உதவுகிறது. |