Home | Enquiry | Advertisement | contact  
 
 
Untitled Document
 
 
 
வடகிழக்குப் பருவ மழை தீவிரம் துணை மேயராக பென்ஜமின் பதவி ஏற்பு மத்திய நிபுணர் குழு சென்னையில் முதல் கூட்டம் தன் அதிகாரத்தை உணர்ந்து மூவரையும் ஜெயலலிதா காப்பாற்ற வேண்டும்: கருணாநிதி காமன்வெல்த் மாநாடு நடைபெற இலங்கைக்கு இந்தியா உதவி: பழ.நெடுமாறன் கண்டனம் திருநள்ளாறு கோயிலில் டிசம்பர் 21-ல் சனிப் பெயர்ச்சி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் மீதான விசாரணை: உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் லாட்டரி அதிபர் மார்ட்டின் குண்டர் சட்டத்தில் கைது விலைவாசி: அமைச்சருடன் சோனியா ஆலோசனை ஊழலை ஒழிக்க பன்முக நடவடிக்கை: பிரதிபா பாட்டீல் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா மனு நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு எல்லையில் அணு ஆயுத ஏவுகணைகளை நிறுத்தியது இந்தியா: காண்டலீஸாரைஸ்
செய்திகள்
 
 
 
 
செய்திகள்
அண்ணா ஹசாரேயின் வாழ்க்கை படமாகிறது
ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்தி போராடிய அண்ணா ஹசாரேயின் வாழ்க்கை மராத்தியில் படமாக வெளிவர இருக்கிறது. மராத்தியில் எடுக்கப்பட்டு வரும் இப்படத்துக்கு "மலா அண்ணா வஹாசே' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கணேஷ் ஷிண்டே என்பவர் திரைக்கதை எழுதி இயக்குகிறார். தீவிரவாதத்தை விட அகிம்சையும், சத்தியாகிரகமுமே சக்தி வாய்ந்தது என்ற பொருளை உணர்த்துவதாக படம் உருவாக்கப்பட்டு வருகிறது.படத்துக்கு மொத்தமாக ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 13-ம் தேதி மகாராஷ்டிரம் முழுவதும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஏழை இளைஞன் வாழ்க்கையிலிருந்து கதை நகர்கிறது. காதலிலும், பள்ளி தேர்விலும் தோற்கும் அந்த இளைஞன் காந்தியத்தை லட்சியமாகக் கொண்டு போராடி புகழ் பெறுவதாக கதை செல்கிறது.
 
நீதிபதி சௌமித்ர சென் ராஜிநாமா: குடியரசுத் தலைவர் ஏற்பு
முறைகேடு புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ர சென்னின் ராஜிநாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதனால் மக்களவையில் திங்கள்கிழமை சென் மீது கொண்டு வர திட்டமிட்டுள்ள பதவிநீக்கத் தீர்மானம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சனிக்கிழமை காலை வழக்குரைஞர் ஒருவர் மூலம் சென் தனது கைப்பட எழுதிய ராஜிநாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ராஜிநாமா கடிதம் முறைப்படி அமைந்துள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. சென் ராஜிநாமா கடிதத்தை தனது சொந்த விருப்பத்தின் பேரிலும், சுயமாகவும், குடியரசுத் தலைவருக்கு முகவரியிட்டு, நேரடியாகக் கொடுத்துள்ளதால், ராஜிநாமாவுக்கு ஒப்புதல் அளித்தல் என்ற நிலைமை ஏற்படவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால் நேரடியாக, கைப்பட எழுதி சமர்ப்பிக்கப்பட்ட காரணத்தால் சென்னின் பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராஜிநாமா கடிதத்தை பரிசீலித்து, மேல் நடவடிக்கைக்காக நீதித்துறைக்கு அனுப்பி வைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிரசாந்த் பூஷணுக்கு உரிமை மீறல் நோட்டீஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையா விமர்சித்ததாக வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் இத்தகைய நோட்டீûஸப் பெறும் இரண்டாவது நபர் பிரசாந்த் பூஷண் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்களை தரக்குறைவாக பேசியதற்கும், விமர்சித்ததற்கும் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். இத்தகைய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது முற்றிலும் நியாயமற்ற செயல் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் முன்னிலையில் உண்மையை பேசினால் அது எப்படி உரிமை மீறலாகும் என்று கேள்வியெழுப்பினார். நாடாளுமன்ற உரிமை குறித்து முற்றிலுமாக மறு ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
 
மேலும்
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பட்டதாரி பயிற்சியாளர் காலியிடங்கள்
  தமிழ்நாட்டிலுள்ள நெய்வேலியைத் தலைமையகமாகக் கொண்டு அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் ....
22 ம் தேதி ராகுல் திடீர் தமிழகம் வருகை ; கருணாநிதியை சந்திப்பாரா ?
  சென்னை: கட்சி வளர்ச்சி பணிகள் ,எதிர்கால திட்டம், கூட்டணி வியூகம் குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க காங்., பொது செயலர் ராகுல் தமிழகம் வருகிறார்...............
பிரதமர் வீட்டிற்கு நடந்து சென்ற சோனியா
  புதுடில்லி : இந்தியா வந்துள்ள சீனப் பிரதமர் வென் ஜியாபோவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், ........
"வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் தமிழகத்துக்கு உலக வங்கி பாராட்டு
  "வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக, துணை முதல்வரை சந்தித்த உலக வங்கி குழுவினர் தெரிவித்தனர்.
     
 
 
தமிழ்நாடு
நாளை "கர' ஆண்டின் முதல் சனிப்பிரதோஷம் நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை
தண்ணீர் கலந்த பெட்ரோல் பொள்ளாச்சியில் விற்பனை
வன விலங்குகளுக்கு இடையூறு கேரள இளைஞர்களுக்கு அபராதம்
தமிழர்களின் வாழ்வியலை வழி நடத்தியது இயற்கை:சூழலியல் படைப்பாளர் பேச்சு
தொடர் மழை: நிரம்பின தடுப்பணைகள்
 
இலங்கை
மே 18 - தமிழீழ தேசிய துக்க நாள் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு !
புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளை தடை செய்ய வேண்டும்! - குதிக்கும் ராஜபக்சே
'இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ்
இலங்கைத் தமிழர் நிலை... அதிர்ச்சியடைந்த இயன் போத்தம்!
இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம்-ராஜபக்சே பேச்சு
 
இந்தியா
ஸ்பெக்ட்ரம் ஊழல் அறிக்கையை தயாரிக்க விடாமல் அமளி: தி.மு.க.,-காங்., முயற்சி வெற்றி?
நூல் விலை மேலும் சரிவு: அதிர்ச்சியில் மில் அதிபர்கள்
கேரளாவிலும் போட்டி போட்டு இலவச அறிவிப்பு
ஸ்பெக்ட்ரம் வழக்கில் தி.மு.க.,வுக்கு நெருக்கடி. முற்றுகிறது!
சபரிமலை 18-ம் படியை அகலப்படுத்த முடியாது : ஐகோர்ட்டில் தேவசம் போர்டு அறிக்கை
 
விளம்பரம்
 
 
 
Untitled Document
 
No Of Viewers 1  
 
  செய்திகள்  |   விளையாட்டு  |  பொழுதுபோக்கு  |  ஆன்மீகம்  | சினிமா   |  இலக்கியம்   |  மரு‌த்துவ‌ம்  |  நாடும்   |  ௨லகம்  |  மாவட்டம்  |  சிரி  
       
    Copyright - 2008  ERODE LIVE