| வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே ஏற்படும் வலுவான உறவால், உலக நாடுகள் பலனடையும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை தகவல் தொடர்பாளர் பி.ஜெ.க்ரொலே குறிப்பிடுகையில், "இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்படும் உறவால் அந்த நாடுகள் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் நன்மையடையும். எனவே தான், இந்த இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம். மும்பை தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த பாகிஸ்தான் முன்வர வேண்டும். நாங்கள் ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வது பாகிஸ்தானுக்கு எதிரானதல்ல; அதேபோல, பாகிஸ்தானுக்கு உதவுவது இந்தியாவுக்கு எதிரானதல்ல' என்றார். |